search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான் தாக்குதல்"

    ஆப்கானிஸ்தானில் ராணுவ அகாடமியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
    காபூல் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி ஒருவன் தாக்குதலை நடத்த முயற்சி செய்துள்ளான். அப்போது அவனை பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்த போது அவன் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். 

    இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மேற்கொண்டாலும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்கிறது.
    ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக சாலையில் கண்ணிவெடியை புதைத்தபோது அது வெடித்து சிதறியதில், 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
    பைசாபாத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

    இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பதக்சன் மாகாணம், வார்தோஜ் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். 

    வாகனங்களை தகர்ப்பதற்காக தலிபான் பயங்கரவாதிகள், திர்கரன் பகுதியில் உள்ள சாலையில் கண்ணிவெடியை புதைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AfghanistanTaliban
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
     


    அதன்படி, குண்டஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த முகாம்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், குண்டஸ் மாகாணத்தின் தலாவியா பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்தனர். #Talibanattacks #Afghanpolicemen
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ஜவ்ஸான் மாகாணத்தில் உள்ள குஷ் டைப்பா மாவட்டத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த தாக்குதலில் 15 போலீசார் உயிரிழந்ததாகவும், 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஜவ்ஸான் மாகாண காவல்துறை தலைவர் முஹம்மது ஜவுஸ்ஜான் இன்று தெரிவித்தார். #Talibanattacks  #Afghanpolicemen
    ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. #Afganistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், போலீசார் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அவர்களை எதிர்த்து அரசு படைகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதல்களில் பயங்கரவாதிகளும், அவர்களது படைகளும் தகர்க்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலில் 7 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afganistan #TalibanAttack
    ஆப்கானிஸ்தானில் கஜ்னி என்ற மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். #TalibanAttack #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கானிஸ்தான் அரசுப் படையும், அதற்கு உதவியாக அமெரிக்க படைகளும் பயங்கரவாதத்தை எதிர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கஜ்னி எனப்படும் மாகாணத்தை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கென அப்பகுதிக்கு துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதிகள் இரவு 2 மணியளவில் பதுங்கி இருந்து அங்கிருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத போலீசார் முதலில் தடுமாறி, பின் எதிர்த்தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு உதவுவதற்காக பாதுகாப்பு படையினரும், அமெரிக்க கூட்டுப்படைகளும் அப்பகுதிக்கு விரைந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சண்டையில் சுமார் 14 போலீசார் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

    மிகவும் கடுமையாக நடைபெற்ற இந்த போரில் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு 39 பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் பயங்கரவாதிகள் எங்கேனும் மறைந்து இருக்கிறார்களா என்பதை அறிய வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ஹெரத் மாகாணத்திலும் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. #TalibanAttack #Afghanistan
    ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர். கடந்த புதன்கிழமை பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சாலை கட்டுமான அலுவலகத்தை குறிவைத்து சில பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 13 என்ஜினியர்கள் மற்றும் 20 பாதுகாவலர்களை கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistanceasefire #Talibanattack
    ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

    இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த ராணுவ தளத்தை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. #Afghanistanceasefire #Talibanattack
    ஆப்கானிஸ்தானில் அரசு அறிவித்த போர் நிறுத்தத்துக்கு இடையில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் மாவட்ட கவர்னர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். #Talibankillsgovernor #Faryabgovernor
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.

    இதற்கிடையில், புனிதமான ரமலான் பண்டிகை காலத்தில் ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கவும், உயிர் பலிகளை தடுக்கவும், அரசுதரப்பில் 8 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலிபான் அமைப்பினர் 3 நாட்கள் மட்டும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டனர்.

    இந்நிலையில், பர்யாப் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் கோஹிஸ்ட்டனாட் மாவட்ட கவர்னர் அப்துர்ரஹ்மான் பன்னாஹ் என்பவர் கொல்லப்பட்டார். கோஹிஸ்ட்டனாட் மாவட்டத்தின் மையப்பகுதியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் அரசுப் படைகளை சேர்ந்த மேலும் 8 பேர் உயிரிழந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இதேபோல், நாட்டின் தென்பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் மாவட்ட கவர்னர் வீட்டின் அருகே நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் கவர்னர் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #Talibankillsgovernor #Faryabgovernor
    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் பலியாகியுள்ளனர். #Afghanistan #Talibanattack
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற தலிபான் அமைப்பு 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக ஒப்புக்கொண்டு இருந்தது. ஆனால் தலிபான் ஒப்புக்கொண்ட 3 நாள் போர் நிறுத்தம் என்று துவங்கும் என்பது குறித்த அறிவிப்பை தலிபான் அமைப்பு வெளியிடவில்லை.

    இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டூஷ் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

    பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளிலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. #Afghanistan #Talibanattack
    ×